நெல்லையில் தி.மு.க. வேட்பாளர் தேவதாச சுந்தரத்தை ஆதரித்து திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், இறுதியாக பாளை மார்க்கெட் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நெல்லையில் இருந்து சென்னைக்கு நான்கு வழிச்சாலை அமைத்து பயண நேரத்தை பாதியாக குறைத்துள்ளோம். இது ஜெயலலிதாவுக்கு தெரியாது. ஏனென்றால், அவர் சாலையில் செல்லாமல் ஆகாயத்தில் வந்து ஆகாயத்திலேயே செல்கிறார்.
சேது சமுத்திர திட்டத்தால் தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவே வளம்பெரும். 40 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. ஜெயலலிதா தடைபெற்றதால் அந்த பணிகள் முடியாமல் உள்ளது.
காங்கிரசையும் தி.மு.க.வையும் விமர்சனம் செய்யும் ஜெயலலிதா, ஏன் பாரதிய ஜனதாவை விமர்சித்து பேசவில்லை. அத்வானி குறித்து ஏன் பேசவில்லை. அ.தி.மு.க.வுக்கும் பி.ஜே.பி.க்கும் மறைமுக தொடர்பு உள்ளது.
கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் ஜெயலலிதா இந்த பகுதிக்கு என்ன செய்தார்? ஏற்கனவே தி.மு.க.வில் தொடங்கப்பட்ட திட்டங்களை முடக்கி வைத்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எந்த திட்டமும் வழங்கவில்லை என்கிறார். இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றார். ஆனால் தி.மு.க. 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது.
பா.ஜ.க. மதவாத கட்சி அல்ல, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கரசேவையை ஆதரித்து பேசியவர் ஜெயலலிதா. ஆனால் தி.மு.க. சிறுபான்மையினருக்கு ரூ.47 கோடி கடன், 4 லட்சத்து 24 ஆயிரத்து 867 மாணவர்களுக்கு ரூ.321 கோடியே 27 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. போப் ஆண்டவர் கூறிய கருத்தை எதிர்த்தார். இப்போது 3 ஆண்டு காலம் வீடியோவில் தான் ஆட்சி நடக்கிறது. தமிழகம் பொருளாதாரத்தில் மற்ற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கி விட்டதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆட்சிக்கு பாடம் புகட்ட நாடாளுமன்ற தேர்தலில் தேவதாச சுந்தரத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் கூறியிருந்தார்.
நெல்லையில் இருந்து சென்னைக்கு நான்கு வழிச்சாலை அமைத்து பயண நேரத்தை பாதியாக குறைத்துள்ளோம். இது ஜெயலலிதாவுக்கு தெரியாது. ஏனென்றால், அவர் சாலையில் செல்லாமல் ஆகாயத்தில் வந்து ஆகாயத்திலேயே செல்கிறார்.
சேது சமுத்திர திட்டத்தால் தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவே வளம்பெரும். 40 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. ஜெயலலிதா தடைபெற்றதால் அந்த பணிகள் முடியாமல் உள்ளது.
காங்கிரசையும் தி.மு.க.வையும் விமர்சனம் செய்யும் ஜெயலலிதா, ஏன் பாரதிய ஜனதாவை விமர்சித்து பேசவில்லை. அத்வானி குறித்து ஏன் பேசவில்லை. அ.தி.மு.க.வுக்கும் பி.ஜே.பி.க்கும் மறைமுக தொடர்பு உள்ளது.
கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் ஜெயலலிதா இந்த பகுதிக்கு என்ன செய்தார்? ஏற்கனவே தி.மு.க.வில் தொடங்கப்பட்ட திட்டங்களை முடக்கி வைத்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எந்த திட்டமும் வழங்கவில்லை என்கிறார். இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றார். ஆனால் தி.மு.க. 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது.
பா.ஜ.க. மதவாத கட்சி அல்ல, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கரசேவையை ஆதரித்து பேசியவர் ஜெயலலிதா. ஆனால் தி.மு.க. சிறுபான்மையினருக்கு ரூ.47 கோடி கடன், 4 லட்சத்து 24 ஆயிரத்து 867 மாணவர்களுக்கு ரூ.321 கோடியே 27 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. போப் ஆண்டவர் கூறிய கருத்தை எதிர்த்தார். இப்போது 3 ஆண்டு காலம் வீடியோவில் தான் ஆட்சி நடக்கிறது. தமிழகம் பொருளாதாரத்தில் மற்ற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கி விட்டதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆட்சிக்கு பாடம் புகட்ட நாடாளுமன்ற தேர்தலில் தேவதாச சுந்தரத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.