BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 18 March 2014

மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகி இருக்க வாய்ப்பே இல்லை-ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு


மாயமான மலேசிய விமானம் எங்கேயாவது மோதியோ, நடுவானில் வெடித்துச் சிதறியோ விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என ஐ.நா. சபையின் ஆதரவோடு இயங்கும் க‌ண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தகவலை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்திதொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்த அமைப்பு, சரவ்தேச கண்காணிப்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விமான விபத்துக்களை 3 அல்லது 4 வழிகளில் இந்த அமைப்பு உறுதிப்படுத்துகிறது.  உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த அமைப்பு உயர்தர சென்சார்களை நிறுவியுள்ளது. அணுஆயுதச் சோதனையோ, விமான விபத்தோ, பூகம்பமோ ஏற்பட்டால் உடனே அதன் தாக்கத்தை சென்சார்கள் பதிவு செய்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.

அதனால் இது வரை சேகரித்த விவரங்கள் மூலம் விமானம் விபத்துக்கு உள்ளாகவில்லை என்றே தெரிகிறது என்ற தகவலை அவர் பகிர்ந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media