ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலை ஒன்றில், மோட்டார் குழாயை சரி செய்வதற்காக தொழிலாளி ஒருவர் முதலில் இறங்கியிருக்கிறார். அப்பொழுது அவர் மயக்கம் அடைந்து விழுந்து கிடப்பதை பார்த்து அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். அனைவரையுமே விஷவாயு தாக்கியதால், அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது
சிப்காட் வளாகத்தில் 7 பேரை பலிகொண்ட இந்த விஷவாயு விபத்து தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.