ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் நிதி திரட்டுவதற்காக பெங்களூரில் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் விருந்து உண்ண விரும்புபவர்கள், 20 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி நடைபெற்ற இந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி ஆம் ஆத்மிக்கு வெற்றிகரமாக நடந்தது.
அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அரசியல் பேசிக் கொண்டே உணவருந்துவதற்கு 20 ஆயிரம் ரூபாயை செலவு செய்ய முன்வந்த 250 பேர் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் மதுவை தவிர்த்து சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் பறிமாறப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின் மூலமாகவும், இதேபோல், முன்னர் நாக்பூரில் சுமார் 150 பேர் தலா 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி பங்கேற்ற மற்றொரு நிகழ்ச்சியின் வாயிலாகவும், இதுவரை ஆம் ஆத்மி கட்சிக்கு சுமார் 70 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக சேர்ந்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.