ஆம் ஆத்மி கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் போட்டியிட இருக்கிறார்.
ஆம் ஆத்மியில் பிப்ரவரி மாதம் இணைந்த உதயகுமார் கட்சியில் சேருவதற்கு முன்பு, சில நிபந்தனைகளை விதித்து இருந்தார். அணு உலைகளை அமைக்கும் முன் அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்ட பின்னரே முடிவு செய்ய வேண்டும், கட்சியின் தேசிய கமிட்டியில் தமிழர்களுக்கு இடம் அளிக்க வேண்டும், பரவலாக்கப்பட்ட தலைமை கட்சியில் இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை ஆம் ஆத்மி ஏற்றுக் கொண்டதால் உதயகுமார் அக்கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில் அவர் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.