BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 18 March 2014

கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் பாமகவினர்- தேமுதிக‌ குற்றச்சாட்டு


தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்பட‌வில்லை. பாமகவுக்கு ஏற்கெனவே 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 12 தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேமுதிக போட்டியிடுள்ள 14 தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டி யலை கட்சித் தலைவர் விஜயகாந்த் நாளை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்க படுகிறது. இதுதொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘பாஜக கூட்டணியில் எங்களுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு 8 தொகுதிகள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது மேலும் சில தொகுதிகளைக் கேட்டு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்கள் வெளியேறுவதற்கு திட்டமிட்டே இவ்வாறு கூடுதல் தொகுதிகளை கேட்கிறார்களோ என்று கருதுகிறோம். எங்களுக்கான தொகுதிகளை பாஜக உறுதி செய்துள்ளது. எனவே, தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை 19-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் நடக்கும் இடத்திலேயே விஜயகாந்த் அறி விக்க உள்ளார்’’ என்று அவர் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media