BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 31 March 2014

கலைஞரை சுற்றி சூழ்ச்சி கும்பல் தான் உள்ளது. அந்த கும்பலின் நிர்பந்தத்தால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது-அழகிரி

நாமக்கல்லில் இன்று மு.க.அழகிரி, தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்தார். அவர்களை ச‌ந்தித்த பிறகு,  நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அழகிரி அளித்த பதில்களும் பின் வருமாறு:

கேள்வி: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்தால் அவர் உங்களுக்கு ஆதரவாக இருந்து இருப்பாரா?

பதில்: அவர் உயிரோடு இருந்தால் எனக்கு மட்டுமல்ல தொண்டர்களுக்கும் ஆதரவாக இருப்பார். எனக்கும் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

கே. ஏன் உங்களை கட்சியை விட்டு நீக்கினார்கள்.?

ப: தலைவர் கலைஞரை சுற்றி சூழ்ச்சி கும்பல் தான் உள்ளது. அந்த கும்பலின் நிர்பந்தத்தால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.

கே.பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுமா?

ப: தி.மு.க. 3-வது இடத்துக்கு போகும்.

கே:.அப்போது யார் தான் தேர்தலில் வெற்றி பெறுவார்கள்?

ப: எனக்கு ஜோசியம் சொல்லத் தெரியாது.

கே. தனிக்கட்சி தொடங்குவீர்களா?

ப: தனிக்கட்சி தொடங்க மாட்டேன். தி.மு.கவில் தான் இருப்பேன். தலைவர் கலைஞர்தான் எனக்கு தலைவர். தி.மு.க. கரை போட்ட வேட்டி தான் கட்டுவேன்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media