மகாராஷ்டிரா மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் விஜய் பாம்ப்ளேவை ஆதரித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது, "மோடி அண்மைக்காலமாக அர்த்தமற்ற விஷயங்களை பேசி வருகிறார். அவருக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்" என்றார்.
மேலும், மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு பற்றியும் தியாகம் பற்றியும் என்ன தெரியும் என கேள்வி எழுப்பியதோடு காங்கிரஸ் கட்சியின் தியாகமே இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டது என்று சரத்பவார் கூறினார்.
குஜராத் கலவரம் குறித்து விமர்சித்த பவார், "2002 குஜராத் கலவரத்தின் போது சிறுபான்மையினரும், காங்கிரஸ் எம்.பி அசான் ஜாஃப்ரியும் படுகொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்தாரை என்றைக்குமே சந்தித்து மோடி ஆறுதல் கூறியதில்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலன் மீதும் மோடிக்கு எந்த அக்கறையும் இல்லை. மோடி, இந்திய தேசத்திற்கு ஒரு ஆபத்து. " என்று பேசியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.