BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 19 March 2014

தமிழ்நாட்டில் நரேந்திர மோடியை யாருக்கும் தெரியாது- ப.சிதம்பரம்


சிவகங்கையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம், "தமிழ்நாட்டில் நரேந்திர மோடியை யாருக்கும் தெரியாது, அவரை கண்டு யாரும் பயப்படவும் இல்லை, வாரணாசி உட்பட இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக மோடி இருப்பதால், ஒரு வேளை பாஜகவிற்கு வேட்பாளர்களுக்கு பற்றாகுறையா?" என்று அவர் கேட்டிருந்தார்.

அருண் ஜெய்ட்லி காங்கிரஸ் சார்பில் போட்டியிட மூத்த தலைவர்கள் ஒதுங்குவதாக கூறியிருப்பது பற்றி கேட்ட போது, "அருண் ஜெய்ட்லி தனது முதல் தேர்தலை 62வது வயதில் சந்திக்கிறார். நான் 30 வருடங்களாக தேர்தல்களை சந்தித்து வருகிறேன். " என கூறினார்.

வாரணாசி தொகுதியில், மோடியை எதிர்த்து ஒரு பலமான வேட்பாளரை காங்கிரஸ் போட்டியிட வைக்கும் என சிதம்பரம் கூறினார்.

சிதம்பரம், சிவகங்கை தொகுதியில் ஏழு முறை தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்.

தமிழ்நாட்டில், காங்கிரஸ் கூட்டணி அமைக்க முடியாதது பற்றி கேட்ட போது, "திமுகவுடன் எந்த தேசிய கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. தேசிய அளவில் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதியாக இருக்க முடியாது, திமுக ஒரு புறக்கணிக்கப்பட்ட கட்சி." என்று அவர் கூறியிருந்தார்.

இது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media