BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 19 March 2014

அதிமுக பிரச்சாரத்தின் போது, ஜெயலலிதா படம் போட்ட முகத்திரை வழங்கிய போலீஸ் மீது திமுக புகார்


தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் தி.மு.க. சார்பில், ஜெயலலிதா படம் போட்ட  முகத்திரையை வழங்கிய போலீஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16-ந்தேதி கள்ளக்குறிச்சி தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அங்கு வந்த கூட்டத்தினருக்கு ஜெயலலிதாவின் படம் போட்ட முகத்திரையை போலீஸ் அதிகாரி ஒருவர் வழங்கிக்கொண்டிருந்தார். பத்திரிகையில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அந்த போலீஸ் அதிகாரி சட்டப்படி செயல்படாமல், அ.தி.மு.க. கட்சிக்காரர் போல் செயல்பட்டு இருக்கிறார். இது சட்டவிரோதம் மட்டுமல்ல, தேர்தல் விதிகளை மீறிய நிகழ்வாகும்.

மேலும், அரசு எந்திரம் முழுவதும், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்காக இயக்கப்படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. எனவே அந்த போலீஸ் அதிகாரியை தேர்தல் பணியாற்றத் தடை செய்ய வேண்டும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media