BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 30 April 2014

ரஜினியில் அடுத்த படம் லிங்கா; மே 3-ல் படப்பிடிப்பு தொடங்க திட்டம்


கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு 'லிங்கா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகைகள் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் ஏ. ஆர்.ரஹ்மான். கோச்சடையான்' படம் மே 9-ல் வெளியாகவுள்ள நிலையில், மே 2-ல் லிங்கா படத்துக்கான பூஜையை நடத்தி, மே 3-ல் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

லிங்கா படத்தின் கதை, வசனம் பொறுப்பை பொன். குமரன் ஏற்று இருக்கிறார். பிரியாமணி நடிப்பில் வெளியான 'சாருலதா' படத்தினை இயக்கியவர் பொன். குமரன் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media