BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 30 April 2014

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, "அதிமுக வெற்றி" என பேனர் வைப்பு; அச்சகத்திற்கு சீல், 4 பேர் கைது


காஞ்சிபுரம் காந்தி சாலையில் காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டு திங்கள்கிழமை டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது. அதில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. வாக்கு எண்ணிக்கைக்கு ஏறக்குறைய 20 நாட்கள் உள்ள நிலையில், வெற்றி பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகாரின்பேரில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் பானு தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று 4 பேனர்களை பறிமுதல் செய்தனர். அதை ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் பரிமளம் மீது விஷ்ணுகாஞ்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய டிஜிட்டல் பேனரை அச்சிட்ட நிறுவனம் காஞ்சிபுரம் மடத்து தெருவில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. செவ்வாய்க்கிழமை அங்கு போலீஸாருடன் சென்ற வட்டாட்சியர் பானு, டிஜிட்டல் பேனர் அச்சிட்ட நிறுவனத்துக்கு சீல் வைத்தார். நிறுவனத்தில் இருந்த உரிமையாளர் கோபிநாத், அவரது உதவியாளர் எத்திராஜ் ஆகியோரை போலீஸாரிடம் ஒப்படைத்தார். பின்னர் டிஜிட்டல் பேனர்களை ஏற்றி வந்த வாகனத்தின் உரிமையாளர் சண்முகம், அந்த வாகனத்தின் ஓட்டுநர் வெங்கடேஷ் உள்பட அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media