காஞ்சீபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜி.செல்வத்தை ஆதரித்து கனிமொழி எம்.பி. நேற்று வாலாஜாபாத்தில் பிரச்சாரம் தொடங்கினார். அத்தொகுதியில் பத்தி இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
கடந்த 2011–ம் ஆண்டு அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கைத்தறி துறையை சீர்படுத்த 10 ஆடை அலங்கார பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒரே ஒரு கைத்தறி பூங்கா அமைப்பதாக மட்டுமே அறிவிப்பு வந்துள்ளது. கைத்தறி பொருள்கள் ஏற்றுமதிக்காக ஒரு கைத்தறி ஏற்றுமதி கழகம் உருவாக்க உறுதி அளித்தார்கள். ஆனால் அதையும் செயல்படுத்தவில்லை.
காஞ்சீபுரத்தில் அதிக அளவில் நெசவாளர்கள் உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் நிலவும் தொடர் மின்வெட்டு காரணமாக 60 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இந்தியாவில் 12 சதவீத அன்னிய முதலீடுகள் தமிழகத்திற்கு வந்த நிலை மாறி இன்று அ.தி.மு.க. ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
தமிழகத்தில் சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தலைவர் கலைஞர் சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா பெயரில் உள்ள நூலகத்தை ஜெயலலிதா அரசு சரியாக செயல்படுத்தவில்லை. புதிய தலைமை செயலகத்தை பன்நோக்கு மருத்துவமனையாக மாற்றி விட்டார்கள். ஆனால் அங்கு மருத்துவர்கள் தேர்வு முறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இதற்கு தமிழக மக்கள் அமைதியாக இருந்து விட்டனர். இந்த நிலை நீடித்தால் அரசாங்க வேலைவாய்ப்பில், கல்லூரிகளில் இடஒதுக்கீடு இல்லை என்று கூறி விடுவார்கள். பிறகு நாம் மீண்டும் பிற்படுத்தப்பட்டோர் என்ற நிலைக்கு தள்ளப்படுவோம்.
பாலாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர் 100 அடிக்க கீழே போய்விட்டது. அதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் குடிநீரை ரூ.10–க்கு அரசு விற்கும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது. அ.தி.மு.க. அவர்களது 2011 தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்றனர். அந்த வாக்குறுதி என்ன ஆனது?.
இவ்வாறு கனிமொழி எம்.பி.பேசினார்.
கடந்த 2011–ம் ஆண்டு அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கைத்தறி துறையை சீர்படுத்த 10 ஆடை அலங்கார பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒரே ஒரு கைத்தறி பூங்கா அமைப்பதாக மட்டுமே அறிவிப்பு வந்துள்ளது. கைத்தறி பொருள்கள் ஏற்றுமதிக்காக ஒரு கைத்தறி ஏற்றுமதி கழகம் உருவாக்க உறுதி அளித்தார்கள். ஆனால் அதையும் செயல்படுத்தவில்லை.
காஞ்சீபுரத்தில் அதிக அளவில் நெசவாளர்கள் உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் நிலவும் தொடர் மின்வெட்டு காரணமாக 60 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இந்தியாவில் 12 சதவீத அன்னிய முதலீடுகள் தமிழகத்திற்கு வந்த நிலை மாறி இன்று அ.தி.மு.க. ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
தமிழகத்தில் சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தலைவர் கலைஞர் சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா பெயரில் உள்ள நூலகத்தை ஜெயலலிதா அரசு சரியாக செயல்படுத்தவில்லை. புதிய தலைமை செயலகத்தை பன்நோக்கு மருத்துவமனையாக மாற்றி விட்டார்கள். ஆனால் அங்கு மருத்துவர்கள் தேர்வு முறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இதற்கு தமிழக மக்கள் அமைதியாக இருந்து விட்டனர். இந்த நிலை நீடித்தால் அரசாங்க வேலைவாய்ப்பில், கல்லூரிகளில் இடஒதுக்கீடு இல்லை என்று கூறி விடுவார்கள். பிறகு நாம் மீண்டும் பிற்படுத்தப்பட்டோர் என்ற நிலைக்கு தள்ளப்படுவோம்.
பாலாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர் 100 அடிக்க கீழே போய்விட்டது. அதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் குடிநீரை ரூ.10–க்கு அரசு விற்கும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது. அ.தி.மு.க. அவர்களது 2011 தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்றனர். அந்த வாக்குறுதி என்ன ஆனது?.
இவ்வாறு கனிமொழி எம்.பி.பேசினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.