BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 8 April 2014

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை


தமிழகத்தில் வரும் 24-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து தமிழக காவல்துறை முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தலை பாகுபாடு இல்லாமல் நடத்துவதற்காக ஐஏஎஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரும் மாற்றப்பட்டுள்ளார். சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த திரிபாதி, புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கமிஷனராக இருந்த ஜார்ஜ், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள திரிபாதி, 2011 மே முதல் 2012 செப்டம்பர் வரை சென்னை மாநகர கமிஷனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media