BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 8 April 2014

யுவராஜ் சிங்கை ஆதரித்து, சச்சின் வெளியிட்டுள்ள செய்தி

டி20 உலக கோப்பை இறுதியில், இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியிடம் தோல்வி அடைந்ததில் இருந்து, சமூக வலைதளங்களில் வசைமொழிகளுக்கு உள்ளாகி வருகிறார், யுவராஜ் சிங். இந்நிலையில் அவருக்கு தனது ஆதரவை தெரிவித்து, சச்சின் டெண்டுல்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதாவது:

"கணிக்க இயலாத தன்மையே கிரிக்கெட்டை ஒரு பரபரப்பான விளையாட்டாக ஆக்குகிறது. நாங்கள் சிறப்பாக செயல்படும்போது வரும் ரசிகர்களின் கைதட்டலை கிரிக்கெட் வீரர்களாக மகிழ்கிறோம். ஆனால், அதைவிட நாங்கள் கஷ்டப்படும்போது ரசிகர்கள் தரும் ஆதரவையும் உற்சாகத்தையுமே அதிகம் மெச்சுகிறோம்.

யுவி, 2007-ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் படைத்த சாதனையிலும், 2011-ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையின் வெற்றியில் அவரது பங்கிலும் நாம் அனைவரும் பெருமையடைந்தோம்.

யுவிக்கு நேற்று கடினமான ஒரு தினமாக அமைந்தது. அதற்கு அவரை விமர்சிக்கலாம். ஆனால், அதற்காக அவரை திறமையற்றவராக நினைத்தலோ கூடாது. கிரிக்கெட் விளையாட்டிலும், விளையாட்டைத் தாண்டியும் பல தடைகளைத் தாண்டி வந்துள்ள யுவியின் மன தைரியத்தைக் கண்டு நான் வியந்துள்ளேன்.

மீண்டும் கண்டிப்பாக இந்தத் தடைகளை எதிர்த்துப் போராடி, தன் மீதுள்ள விமர்சனங்களை பொய்யாக்கும் வலிமையும் திறனும் யுவிக்கு உள்ளது என்பதை நான் அறிவேன்.

யுவி, பல இனிமையான நினைவுகளில் உங்களின் பங்கை, ஒரு கசப்பான தினம் குறைத்துவிட முடியாது. நீங்கள் இன்று சரிவை சந்தித்திருக்கலாம். ஆனால், வீழ்ச்சி என்பது உங்களுக்கு வெகு தூரம்."

இவ்வாறு சச்சின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media