BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 8 April 2014

இன்டர்நெட் மூலம் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் வாக்களிக்க முடியுமா?





வெளிநாடுகளில் இருந்தபடியே வாக்களிக்க 114 நாடுகள் அனுமதிக்கின்றன. ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில், மக்களவைத் தேர்தலில், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தங்களது வாக்குகளை இணையதளம் மூலம் செலுத்த அனுமதிப்பது தொடர்பாக,  அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் ஷம்ஷீர் என்பவர் இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். தூதரக அளவில் வாக்குச் சாவடிகளை அமைத்தல், தபால், இணையம் மூலம் வாக்கு செலுத்துதல், மின்னணு முறையில் வாக்கு செலுத்துதல் போன்ற நடைமுறைகளை வெளி நாடுகளிலிருந்து வாக்களிக்கப் பின்பற்றலாம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இவ்வழக்கு, விசாரணைக்கு வந்த போது, இணையதளம் மூலம் என்.ஆர்.ஐ. வாக்கைச் செலுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media