திமுக ராமநாதபுரம் எம்.பி.யும், அழகிரியின் ஆதரவாளருமான ஜே.கே.ரித்தீஷ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருடன், ராமநாதபுரம் மாவட்டம் திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் கே.நாகநாதசேதுபதியும் அதிமுகவில் இணைந்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த சந்திப்பின்போது, ரித்தீஷ், நாகநாத சேதுபதி இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா அதிமுக அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்ட பின்னர், அழகிரியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்திருந்தார் ரித்தீஷ் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், திமுகவில் ஸ்டாலினின் கை ஓங்கியிருப்பதாகவும், அவர் கைக்காட்டியவர்களுக்கே திமுகவில் தேர்தலில் நிற்பதற்கான சீட் கிடைத்ததாகவும், அவரின் தலைமையை கட்சியில் உள்ளவர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த சந்திப்பின்போது, ரித்தீஷ், நாகநாத சேதுபதி இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா அதிமுக அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்ட பின்னர், அழகிரியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்திருந்தார் ரித்தீஷ் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், திமுகவில் ஸ்டாலினின் கை ஓங்கியிருப்பதாகவும், அவர் கைக்காட்டியவர்களுக்கே திமுகவில் தேர்தலில் நிற்பதற்கான சீட் கிடைத்ததாகவும், அவரின் தலைமையை கட்சியில் உள்ளவர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.