BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 10 April 2014

திமுகவிலிருந்து வைகோ வெளியேற, தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் தான் காரணம்

தி.மு.க. பிரமுகர் இல்ல விழாவில் நேற்று கலந்து கொண்ட மு.க.அழகிரி, “திமுகவிலிருந்து வைகோ வெளியேற, தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் தான் காரணம்” என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

"வைகோ, தேனி தொகுதி மக்களுக்காக நிறைய பாடுபட்டுள்ளார். பெரியாறு அணை விவகாரத்தில் அவர் ஏராளமான போராட்டங்களை நடத்தி உள்ளார். அதை நம்பி, ம.தி.மு.க. இத்தொகுதியில் போட்டியிடுகிறது. அதுபோல, ஜே.எம். ஆரூண் எம்.பி-யும் இரண்டு முறை இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நிறைய சேவைகளைச் செய்துள்ளார். அதனால், அவரும் மீண்டும் நிற்கிறார்.

ஆனால், திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம் எதற்காக இந்தத் தொகுதியில் நிற்கிறார்? அவருக்கு என்ன தகுதி உள்ளது? அவரது ஒரே தகுதி, சாதனை கட்சி விட்டு கட்சி தாவுவதுதான். ம.தி.மு.க-வில் இருந்த அவரை மீண்டும் தி.மு.க-வுக்கு கொண்டு வந்ததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு.

வைகோ தி.மு.க-வை விட்டு வெளியேற முக்கியக் காரணம் இந்த பொன்.முத்துராமலிங்கம்தான். அவரை ஏற்றிவிட்டு ஏற்றி விட்டே, தனிக்கட்சி (ம.தி.மு.க) தொடங்க வைத்தார். பிறகு அவருக்கும் துரோகம் செய்துவிட்டு தி.மு.க. வுக்கு வந்துவிட்டார். "

இவ்வாறு அழகிரி கூறியிருந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media