BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 10 April 2014

"ஓட்டு வேண்டுமெனில் எங்களுக்கு பெண் பார்த்து கொடுங்கள்"-ஹரியாணாவில் திருமணம் ஆகாதவர்கள் சங்கம்

ஹரியாணா மாநிலத்தில் பாலின விகிதம் மிகக்குறைவாக இருக்கிறது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி ஹரியாணாவில் 1,000 ஆண்களுக்கு 879 பெண்கள்தான் உள்ளனர். இதனால், ஹரியாணாவில் ஏராளமான ஆண்கள் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் விரக்தியில் உள்ளனர்.

திருமணமாகாதவர்கள் ஒன்று சேர்ந்து அவிவாஹித் புருஷ் சங்கதன் (விவாகமாகா தவர்கள் சங்கம்) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். வேட்பாளர்கள் வாக்குச் சேகரிக்க வரும்போது, இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள், “எங்களுக்குத் திருமணத்துக்குப் பெண் பார்த்துக் கொடுத்தால், எங்கள் வாக்கு உங்களுக்குத்தான்” எனக் கூறி வருகின்றனர்.

இதுக் குறித்து பிபிபூர் கிராமத் தலைவர் சுனில் ஜக்லான் கூறுகையில், “பெண் சிசுக்கொலை மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. உடனடியாக இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், மிகவிரைவிலேயே மிக மோசமான பின்விளைவைச் சந்திக்க நேரிடும். ‘பெண்பார்த்துக் கொடு; வாக்களிக்கிறோம்’ என்ற அந்த கோரிக்கை வாசகம், அனைத்து இளைஞர்களும் திருமணத்துக்காகப் பெண் வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் சொல்லப் படவில்லை. பெண் சிசுக் கொலை பிரச்சினையை அரசியல்வாதிகள் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே சொல்லியிருக்கிறோம்”, என்று கூறினார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media