காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி இன்று டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய பிரியங்கா, தன் தாய் சோனியா காந்தியின் ரேபரேலி மற்றும் சகோதரர் ராகுல் காந்தியின் அமேதி ஆகிய தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். மேலும், பா.ஜனதா கூறுவதுபோல் எந்த மோடி அலையும் வீசவில்லை என்றும் குறிப்பிட்டார்.
பிரியங்காவின் அரசியல் கூர்மை பற்றி 1990ல் ராஜீவ் காந்தி தன்னிடம் கூறியதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் பிரியங்கா கட்சியில் முன்னிலைப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் பிரியங்காவும் பங்கேற்றார். எனினும், இப்போது பிரியங்கா தனது பிரச்சார திட்டத்தை விரிவுபடுத்த தயாராக இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
பிரியங்காவின் அரசியல் கூர்மை பற்றி 1990ல் ராஜீவ் காந்தி தன்னிடம் கூறியதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் பிரியங்கா கட்சியில் முன்னிலைப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் பிரியங்காவும் பங்கேற்றார். எனினும், இப்போது பிரியங்கா தனது பிரச்சார திட்டத்தை விரிவுபடுத்த தயாராக இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.