சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது அவர்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு குற்றம் இழைப்போருக்கு, தூக்கு தண்டனை கொடுக்கும் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மொராடாபாத்தில் பேசிய அவர், "ஆண்கள் தவறு இழைப்பார்கள் தான். அதற்காக அவர்களை தூக்கிலிட கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பிற்கு கொடுக்கப்படும் தூக்கு தண்டனையை ரத்து செய்வோம்" என்று கூறினார். தன்னுடைய கருத்திற்கு விளக்கம் அளித்த அவர், ஆண்களும் பெண்களும் நண்பர்களாக பழகுகின்றனர். தவறுதலாக ஏதாவது நடந்துவிட்டால், கற்பழிப்பு புகார் அளிக்கப்படுகிறது. இந்த சட்டத்தை நாங்கள் மாற்றுவோம். மேலும் இது போன்ற சட்டத்தை தவறுதலாக பயன்படுத்துவோரும் தண்டிக்கப் படுவதற்கு வழி செய்வோம் என தெரிவித்தார்.
இது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மொராடாபாத்தில் பேசிய அவர், "ஆண்கள் தவறு இழைப்பார்கள் தான். அதற்காக அவர்களை தூக்கிலிட கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பிற்கு கொடுக்கப்படும் தூக்கு தண்டனையை ரத்து செய்வோம்" என்று கூறினார். தன்னுடைய கருத்திற்கு விளக்கம் அளித்த அவர், ஆண்களும் பெண்களும் நண்பர்களாக பழகுகின்றனர். தவறுதலாக ஏதாவது நடந்துவிட்டால், கற்பழிப்பு புகார் அளிக்கப்படுகிறது. இந்த சட்டத்தை நாங்கள் மாற்றுவோம். மேலும் இது போன்ற சட்டத்தை தவறுதலாக பயன்படுத்துவோரும் தண்டிக்கப் படுவதற்கு வழி செய்வோம் என தெரிவித்தார்.
இது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.