BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 22 April 2014

மத வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா மீது எப்.ஐ.ஆர். பதிவு

குஜராத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் உள்ள வீட்டை முஸ்லிம் வியாபாரி ஒருவர் வாங்கியுள்ளார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா பங்கேற்றார். அப்போது, அந்த வீட்டை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும்படியும், பஜ்ரங் தளம் அமைப்பின் பலகையை தொங்கவிடுமாறும் தொகாடியா அறிவுறுத்தினார் என்று கூறப்படுகிறது.

"இந்த வீட்டை வாங்கி, குடியேறியுள்ள முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபர், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காலி செய்ய வேண்டும். அதற்கு மறுத்தால், கற்கள், டயர்கள், தக்காளிகளுடன் அவரின் அலுவலகத்தை முற்றுகையிடுங்கள். அதில் தவறேதும் இல்லை. ராஜீவ் காந்தியை கொன்றவர்களே தூக்கிலிடப்படாமல் உள்ளனர். எனவே, வீட்டை காலி செய்ய வைப்பதால் தொடரப்படும் வழக்கைப்பற்றி பயப்பட வேண்டாம். வழக்கு நீண்ட நாள்களுக்கு நடைபெறும். " இவ்வாறு பிரவீண் தொகாடியா பேசினார். அந்த வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கக்கூடும் என்பதால், ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மத வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா மீது குஜராத் மாநிலம் பாவ்நகர் போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media