பிரதமர் நரேந்திர மோடியை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பின் போது, பிரதமர் மோடியுடன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும், மும்பை 26 / 11 பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணை குறித்து நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தவிர, இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக மேம்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவுக்கு சமாதான செய்தியுடன் வந்திருப்பதாகவும், 1999-ல் வாஜ்பாயும் - தானும் விட்டுச் சென்ற அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர விரும்புவதாகவும் நேற்று நவாஸ் கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.