BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 27 May 2014

மும்பை 26 / 11 பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணை குறித்து நவாஸ் ஷெரீப்பிடம் விசாரித்த‌ மோடி


பிரதமர் நரேந்திர மோடியை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பின் போது, பிரதமர் மோடியுடன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும், மும்பை 26 / 11 பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணை குறித்து நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தவிர, இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக மேம்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு சமாதான செய்தியுடன் வந்திருப்பதாகவும், 1999-ல் வாஜ்பாயும் - தானும் விட்டுச் சென்ற அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர விரும்புவதாகவும் நேற்று நவாஸ் கூறியிருந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media