BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 27 May 2014

பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை அதிபர் ராஜபக்சே சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என நம்ப படுகிறது.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகள் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு,  தமிழக கட்சிகள், தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், ஈழத்தமிழர் நலன் கருதியே இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பாஜக தொடர்ந்து வலியுறுத்து வந்தது. இந்நிலையில், எதிர்ப்புகளுக்கு இடையே இந்தியா வந்துள்ள ராஜபக்சே பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ராஜபக்சே, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்கிறார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media