1996ல் ஆரம்பித்து தற்போது சில மாதங்கள் முன்பு வரை டில்லியில் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் கேபினேட் மற்றும் இணையமைச்சர்களாக இருந்தனர், குறைந்தது 6 அமைச்சர்கள் அதிகபட்சமாக 12 அமைச்சர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்
தற்போது 2014ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களை வென்றது, பாஜகவும் பாமகவும் தலா ஒரு இடத்தில் வென்றது, 1996ல் இருந்து 2014 வரை கடந்த 18 ஆண்டுகளாக பல கேபினேட் அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களை கொண்டிருந்த தமிழகம் தற்போது மீண்டும் பழைய கதையாக ஒரே ஒரு இணை அமைச்சரை பெற்று டெல்லியின் தன் பிடியை இழந்துள்ளது.
எப்போதெல்லாம் தேசிய கட்சிகள் வலுவாக இந்தியாவில் உள்ளதோ அப்போதெல்லாம் தமிழகம் புறக்கணிக்கப்படுவது வழக்கம், முன்பு காங்கிரஸ் கட்சி வலுவாக தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி செய்யும் போது தமிழகத்திற்கு ஒரு இணை அமைச்சர் பதவி தான் கிடைக்கும், தற்போது பாஜக தனிப்பெரும்பாண்மை பெற்றுள்ள நிலையிலும் ஒரே ஒரு இணை அமைச்சர் பதவி தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
கடந்த 18 ஆண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 2ஜி போன்ற மெகா ஊழல்களில் சிக்கியிருந்தாலும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர், ஆனால் தற்போது தமிழகத்தின் ஒரே ஒரு இணை அமைச்சரால் என்ன செய்ய இயலும் என்ற கேள்வி எழுந்துள்ளது? தமிழகம் பழைய மாதிரியே புறக்கணிப்புக்குள்ளாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் மோடி அரசால் புறக்கணிக்கப்படுமா என்ற கேள்விதான் தற்போது அனைவர் மனதிலும் மேலோங்கியுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.