கர்நாடக மாநிலத்தில், பட்டத்தக்கலை பகுதியைச் சேர்ந்த சையித் வக்காஸ் பர்மாவர் (24) என்பவர் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
கடந்த மே 16-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானபோது வக்காஸ் தனது நண்பர்களுக்கு ‘வாட்ஸ் அப்’பில் குறுஞ்செய்தி அனுப்பி யுள்ளார். பாஜகவின் பிரச்சார ஸ்லோகனான “இதுதான் சிறந்த தருணம்… மோடியை தேர்ந்தெடுங்கள்” என்பதை, “இது தான் சிறந்த தருணம்… மோடிக்கு இறுதி அஞ்சலி செலுத்துங்கள்” என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இந்த குறுஞ்செய்தி ஒவ்வொருவராகக் கடந்து பாஜக தொண்டர் ஜெயந்த் தினேகர் என்பவருக்கும் சென்றுள்ளது. இதை தொடர்ந்து அவர் சைபர் கிரைம் போலீஸாரிடம் கடந்த 22-ம் தேதி புகார் அளித்துள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் வக்காஸின் தொலைபேசியை கண்காணித்தபோது அவர் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வக்காஸ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். விசாரணையில், வக்காஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர் மீது ஐ.டி. சட்டத்தின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
பல்வேறு மாணவர் மற்றும் அரசியல் அமைப்புகள் வக்காஸின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த மே 16-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானபோது வக்காஸ் தனது நண்பர்களுக்கு ‘வாட்ஸ் அப்’பில் குறுஞ்செய்தி அனுப்பி யுள்ளார். பாஜகவின் பிரச்சார ஸ்லோகனான “இதுதான் சிறந்த தருணம்… மோடியை தேர்ந்தெடுங்கள்” என்பதை, “இது தான் சிறந்த தருணம்… மோடிக்கு இறுதி அஞ்சலி செலுத்துங்கள்” என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இந்த குறுஞ்செய்தி ஒவ்வொருவராகக் கடந்து பாஜக தொண்டர் ஜெயந்த் தினேகர் என்பவருக்கும் சென்றுள்ளது. இதை தொடர்ந்து அவர் சைபர் கிரைம் போலீஸாரிடம் கடந்த 22-ம் தேதி புகார் அளித்துள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் வக்காஸின் தொலைபேசியை கண்காணித்தபோது அவர் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வக்காஸ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். விசாரணையில், வக்காஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர் மீது ஐ.டி. சட்டத்தின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
பல்வேறு மாணவர் மற்றும் அரசியல் அமைப்புகள் வக்காஸின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.