தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று, நாட்டின் பிரதமராக பதவியேற்க போகும் நரேந்திர மோடிக்கு சோனியா மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவிக்காதது ஆச்சரியம் அளிக்கிறது என பாஜக தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 330-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. வருகிற 21-ந்தேதி பிரதமராக பதவி ஏற்க இருக்கும் மோடிக்கு அமெரிக்க தலைவர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம், ஸ்ரீலங்கா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் இந்தியாவின் அடிப்படை கலாச்சாரத்தை பின்பற்றி ஒரு வாழ்த்துக்கூட சொல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று வெங்கையா நாயுடு கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.