நேற்று ஸ்டாலின் இல்லத்தின் முன்பு குவிந்திருந்த பத்திரிக்கையாளர்கள் மீது ஸ்டாலின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டிக்கதக்கது என பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். டெல்லி செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் சென்றிருந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பத்திரிகையாளர்களை யார் தாக்கினாலும் ஏற்று கொள்ள இயலாது. எந்த கட்சியாக இருந்தாலும் சரி. கலைஞர் கருணாநிதி பத்திரிகை, ஊடகங்கள் சுதந்திரத்தை மதிக்க கூடியவர். இத்தகைய சம்பவத்தை ஏற்க முடியாது.
மத்திய மந்திரி பொறுப்பு யார், யாருக்கு என்பதெல்லாம் பிரதமர் மோடிதான் முடிவு செய்வார். ஒரு பிரதமர் முழுமையான அதிகாரமும், சுதந்திரமும் பெற்று செயல்பட்டால் தான் முறையாக இருக்கும்.
கூட்டணி கட்சிகள் யாரையும் விட்டு கொடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதை ஏற்றுக் கொண்டோம்.
இந்த தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும் என்பது தான் என் ஆசை. பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு மத்திய மந்திரி பதவி பற்றி நான் எதுவும் கூற இயலாது. அதை மோடிதான் முடிவு செய்வார்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பத்திரிகையாளர்களை யார் தாக்கினாலும் ஏற்று கொள்ள இயலாது. எந்த கட்சியாக இருந்தாலும் சரி. கலைஞர் கருணாநிதி பத்திரிகை, ஊடகங்கள் சுதந்திரத்தை மதிக்க கூடியவர். இத்தகைய சம்பவத்தை ஏற்க முடியாது.
மத்திய மந்திரி பொறுப்பு யார், யாருக்கு என்பதெல்லாம் பிரதமர் மோடிதான் முடிவு செய்வார். ஒரு பிரதமர் முழுமையான அதிகாரமும், சுதந்திரமும் பெற்று செயல்பட்டால் தான் முறையாக இருக்கும்.
கூட்டணி கட்சிகள் யாரையும் விட்டு கொடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதை ஏற்றுக் கொண்டோம்.
இந்த தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும் என்பது தான் என் ஆசை. பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு மத்திய மந்திரி பதவி பற்றி நான் எதுவும் கூற இயலாது. அதை மோடிதான் முடிவு செய்வார்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.