பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, டெல்லியில் மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கு பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் முகேஷ் சர்மா கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அரசியல் லாபம் பெறுவதற்காகத்தான், முதல் அமைச்சர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். சட்டசபையை கலைக்கக்கோரி நீதிமன்றத்திற்கு சென்ற அவர், டெல்லி மக்களை திக்கற்றவர்களாக விட்டுவிட்டார்.
தற்போது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாததால், டெல்லியில் மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து அவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் மீண்டும் ஆதரவளிக்காது. ஆம் ஆத்மிக்கு ஆதரவை நீட்டிப்பது என்ற கேள்வியே எழவில்லை.
ஆம் ஆத்மியின் முடிவை பா.ஜனதாவும் குறை கூறியுள்ளது. 'மக்களால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட அக்கட்சியை எவ்வாறு மீண்டும் ஆட்சியமைக்க அழைக்க முடியும்?' என்று பா.ஜனதா தலைவர் ஹர்சவர்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறும்போது, ‘காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை மக்கள் முழுவதுமாக நிராகரித்து விட்டனர். இதற்கு பின்னரும் அவர்கள் இணைந்து டெல்லியில் சட்டவிரோதமாக ஆட்சியமைக்க முற்பட்டால், தேர்தலில் அவர்களுக்கு மக்கள் தகுந்த தண்டனை வழங்குவர்’ என்றார்.
இது குறித்து மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் முகேஷ் சர்மா கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அரசியல் லாபம் பெறுவதற்காகத்தான், முதல் அமைச்சர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். சட்டசபையை கலைக்கக்கோரி நீதிமன்றத்திற்கு சென்ற அவர், டெல்லி மக்களை திக்கற்றவர்களாக விட்டுவிட்டார்.
தற்போது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாததால், டெல்லியில் மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து அவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் மீண்டும் ஆதரவளிக்காது. ஆம் ஆத்மிக்கு ஆதரவை நீட்டிப்பது என்ற கேள்வியே எழவில்லை.
ஆம் ஆத்மியின் முடிவை பா.ஜனதாவும் குறை கூறியுள்ளது. 'மக்களால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட அக்கட்சியை எவ்வாறு மீண்டும் ஆட்சியமைக்க அழைக்க முடியும்?' என்று பா.ஜனதா தலைவர் ஹர்சவர்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறும்போது, ‘காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை மக்கள் முழுவதுமாக நிராகரித்து விட்டனர். இதற்கு பின்னரும் அவர்கள் இணைந்து டெல்லியில் சட்டவிரோதமாக ஆட்சியமைக்க முற்பட்டால், தேர்தலில் அவர்களுக்கு மக்கள் தகுந்த தண்டனை வழங்குவர்’ என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.