கன்னக்கோடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(35). இவரது மனைவி சீதாலட்சுமி (31). தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சீதாலட்சுமி அதற்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்றார். அங்கு செய்யப்பட்ட தவறான அறுவைச் சிகிச்சையால், சீதாலட்சுமி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். அவரை வேறு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்தும் பலனில்லை. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் சீதாலட்சுமி சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருடைய உடல்நிலை யில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் மனம் வெறுத்த சுப்பிர மணியம், மனைவியை கருணைக் கொலை செய்யக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தார்.
சீதாலட்சுமிக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்ததுடன், அவரது குடும்பத் துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
முதல்வர் அறிவித்த சிறப்பு மருத்துவக் குழுவினர் சீதா லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் பலனாக அவர் தற்போது கோமாவில் இருந்து வெளியே வந்துவிட்டார். அவரது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை மீண்டும் இயல்பான நிலைக்கு மாற்ற டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சீதாலட்சுமிக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்ததுடன், அவரது குடும்பத் துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
முதல்வர் அறிவித்த சிறப்பு மருத்துவக் குழுவினர் சீதா லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் பலனாக அவர் தற்போது கோமாவில் இருந்து வெளியே வந்துவிட்டார். அவரது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை மீண்டும் இயல்பான நிலைக்கு மாற்ற டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.