இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் , தமிழக கிரிக்கெட் வீரருமான முரளி கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவாதாக அறிவித்து உள்ளார் . இவர் இந்திய அணிக்காக 8 டெஸ்ட் ,37 ஒரு நாள் போட்டி , 1 டி20 போட்டியில் விளையாடி உள்ளார் .இவர் விளையாடிய காலத்தில் அனில் கும்ப்ளே ,ஹர்பஜன் சிங் என இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டதால் இவரால் இந்திய அணிக்காக பெரிய அளவில் விளையாட முடியவில்லை .203 முதல் தர போட்டிகளில் விளையாடி 644 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் .ரஞ்சி டிராபியில் ரயில்வே அணி 2000-01,2001-02 ஆண்டுகளில் சாம்பியனாக முக்கிய காரணமாக இருந்தவர் .எனினும் இந்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாட தயாராக இருப்பதாக கூறி உள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.