விஜய் டிவியில் நடந்து வரும் நிகழ்ச்சி 'காபி வித் டி.டி. '. இந்த நிகழ்ச்சியே சௌந்தர்யாவுகும் சிம்புவுக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோச்சடையான் படம் உருவான விதம் என பல செய்திகளை பகிர்ந்து கொண்டார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இடையே ஒரு விளையாட்டு நடந்தது . டி.டி. ஒவ்வொரு நபரின் புகைப்படமாக காண்பிப்பார் அதற்கு சௌந்தர்யா அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளை சொல்ல வேண்டும் . அதில் சிம்புவின் பெயர் வந்த போது , சௌந்தர்யா "பாடதே சிம்பு நிறுத்திடு ப்ளீஸ் " என்றார் . இது தான் பிரச்சனைக்கு காரணம் . இதனால் சிம்பு ரசிகர்கள் கொதித்து எழுந்தனர் . சௌந்தர்யாவை ட்விட்டெரில் திட்டி பதிவுகள் போட்டனர் . இதனால் பெரும் பிரச்சனை ஆனது .
இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சிம்புவின் பதிவு இருந்தது .சிம்புவின் பதிவு பின்வருமாறு உள்ளது .அனைவருக்குமே மற்றவரின் செய்யலை விமர்சிக்க உரிமை உண்டு . எனது ரசிகர்கள் செய்வது தவறு .என்னை மதிப்பது போல மற்றவரையும் மதிக்கணும் .அவர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும் என்றார் .இது குறித்து கூறிய சௌந்தர்யா 'சிறுவயதில் இருந்தே சிம்பு எனக்கு நண்பர் , நான் விளையாட்டாகத்தான் அப்படி கூறினேன் . எங்களுக்குள் எவ்வித சண்டையும் இல்லை என்றார் '.
தமிழக ரசிகர்களின் செயல் எப்போதும் மோசமானதாகவே உள்ளது . இது நாம் திருத்திக்கொள்ள வேண்டிய தருணம் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.