ஸ்மார்ட் போன் ஒன்றை திருடி அதை பயன்படுத்த தெரியாமல் உரிமையாளரின் பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய செல்பியை வெளியிட்டு மாட்டிக் கொண்டார் முட்டாள் திருடன் .
நியுயார்க்கில் கோர்ட்னி ஜில்ஸ் என்பவரின் ஸ்மார்ட்போன் திருடு போனது . இவர் மொபைலை தேடிக் கொண்டு இருக்கும் போது , இவருக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது . இவரது பேஸ்புக்கில் யாரோ ஒருவர் செல்பி ஒன்றை வெளியிட்டு இருந்தார் . அப்போது தான் இவருக்கு தெரிந்தது , மொபைலில் இவர் பேஸ்புக்கில் லாக்-அவுட் செய்யாமல் இருந்தது . எனவே அந்த மொபைலை திருடியவர் தான் இந்த செல்பி எடுத்து தெரியாமல் பேஸ்புக்கில் வெளியிட்டு இருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டு போலிஸிடம் தகவலை தெரிவித்தார் ஜில்ஸ் .
இது குறித்து ஜில்ஸ் கூறுகையில் , " அவருடைய முட்டாள்தனம் எனக்கு சாதகமாக பயன்படுகிறது " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.