எபோலாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீஜித் என்ற மங்களூரைச் சேர்ந்த எம்.டெக் மாணவர் ஒருவர் இன்று பலியானார். இதன் மூலம் கர்நாடகத்தினுள் எபோலா எதிர்ப்பாராத விதமாக நுழைந்துவிட்டது. அனைவரும் தேவையான முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். நண்பர்களே, உங்கள் உணவில் அன்றாடம், துளசியை சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், எபோலா தாக்குவதிலிருந்து தப்பிக்களாம்" என்பது தான் வாட்ஸ் ஆப்-இல் இந்திய நகரங்கள் முழுவதும் பரவிய வதந்தி.
ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் , யாரும் இதனை நம்ப வேண்டாம் என அரசு கூறியுள்ளது. இறந்த வாலிபர் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைபாடு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு எபோலா தொற்று ஏற்படவில்லை. எனவே இந்த வதந்தி பிற நகரங்களில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.