பீகார் மாநிலத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடந்தது. அதற்கு முன் நடந்த லோக் சபா தேர்தலில் மோடி அலையினால் பாஜக 40 தொகுதிகளில் 31 தொகுதிகளை கைபற்றியது. எனவே இனி மோடியை எதிர்க்க வேண்டுமானால் எதிரிகள் இருவரும் கைகோர்த்தால் தான் சரியாகும் என முடிவு எடுத்தார்கள், அங்கு எதிரிகளாக இருந்த முன்னாள் முதல்வர்கள் நிதிஷ் குமாரும் , லாலு பிரசாத் யாதவும். இவர்களுடன் காங்கிரஸும் சேர்ந்து கொண்டது.
இது பாஜகவுக்கு மிக பெரிய போட்டியை உருவாக்கியது. தேர்தலுக்கு முன் இருந்த மோடி அலை மோடி பதவிக்கு வந்த பின்பும் இருக்குமா என்பதை நிருபிக்கும் தேர்தலாக இது பார்க்கப்பட்டது. ஆனால் அதில் மோடி தோல்வியடைந்து விட்டார். 10 தொகுதிகளில் 4 தொகுதிகளில் தான் பாஜக வெற்றி பெற்றது. மீதி 6 தொகுதிகளில் நிதிஷ் - லாலு கூட்டணி வெற்றி பெற்றது. இது மோடி பெற்று இருக்கும் முதல் தோல்வியாக கருதப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.