இன்று உலகம் முழுவதும் வரும் ஒரு செய்தி ஏ.எல்.எஸ். ஐஸ் பக்கெட் சாலஞ். இது ஏ.எல்.எஸ் என்னும் அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு சாலஞ் ஆகும். இது ஏ.எல்.எஸ். என்னும் நோயை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஆகும். இதில் பங்கேற்பவர் ஒரு பக்கெட்டில் ஐஸ் வாட்டரை எடுத்துக் கொண்டு அதனை அவர் மீது ஊத்தி கொள்ள வேண்டும். அதன் பின்பு அவருக்கு தெரிந்த மூன்று பேரை கைக்காட்ட வேண்டும். அவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் இது போல செய்ய வேண்டும். இதனை செய்ய தவறுபவர்கள் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு 100 டாலர் உதவியாக வழங்க வேண்டும். இதன் மூலம் இந்த நோயை பற்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்வார்கள்.
இதனை போல் இந்தியாவில் ரைஸ் பக்கெட் சாலஞ் என புதிதாக ஒன்றை தொடங்கி உள்ளார்கள். இது என்னவென்றால் ஒருவர், ஒரு பக்கெட் முழுவதும் அரிசியால் நிரப்பி அதனை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் ஒரு நபருக்கு தர வேண்டும் அல்லது 100 ரூபாய் பணத்தை கஷ்டப்படும் ஒருவருக்கு தர வேண்டும். அந்த போட்டோவை பேஸ்புக்கில் பதிவு செய்து, #ரைஸ் பக்கெட் சாலஞ் என ட்ரென்ட் செய்ய வேண்டும். இது விளம்பர நோக்குடன் செய்யப்படுவது அல்ல . உணவு இல்லாமல் கஷ்டப்படுபவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக செய்யப்பட்டு வருகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.