கேரளாவில் நடக்கும் 700 மதுபான பார்களை மூட அரசு முடிவு செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஞாயிற்றுகிழமை மதுபான கடைகளுக்கு விடுமுறை விட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியும் என அரசு நம்புகிறது. சில்லறை மதுபான கடைகளைப் பொறுத்தவரை, ஆண்டுதோறும் 10 சதவீத கடைகள் மூடப்படும்.
மாதத்தின் முதல் நாள், மதுவுக்கு விடுமுறை நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளையும் மது விடுமுறை நாட்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுக்கு 52 நாட்களுக்கு மேல், மது விடுமுறை நாட்களாக இருக்கும். மதுவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யும் திட்டமும் வைத்துள்ளார்கள்.
இதே போல் தமிழகத்திலும் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்யலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.