ஆந்திராவில் கடந்த வாரம் பாலியல் தொழில் ஈடுபட்ட தேசிய விருது வாங்கியபிரபல தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டார், அப்போதே அந்த நடிகை இந்த தொழிலில் மேலும் பல நடிகைகள் ஈடுபட்டு வருவதாக கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகின, இந்நிலையில் மற்றொரு பிரபல நடிகையும் இரண்டு துணை நடிகர்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சென்ற வாரம் கைது செய்யப்பட்ட ஸ்வேதா பாசுவிடம் கிடைத்த தகவல்களை வைத்து போலீஸார் கைது செய்வதாக தகவல்கள் வெளிவருகின்றன.
கைது செய்யப்பட்ட தெலுங்கு நடிகை திவ்யஸ்ரீ "பிடெக் பாபு" ( B.Tech Babu) என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இவர் ஆந்திராவில் உள்ள குண்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் செய்வதாக வந்த ரகசிய தகவலை அடுத்து அந்த வீட்டை முற்றுகையிட்ட போலீஸார் அந்த வீட்டின் உள்ளே அரைகுறை உடையுடன் இருந்த நடிகை திவ்யஸ்ரீ மற்றும் அவருடன் இருந்த இரண்டு துணை நடிகர்களை கைது செய்தனர்.
ஆந்திராவில் விபசாரம் செய்யும் நடிகைகள், நடிகர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், இதில் ஈடுபடும் நட்சத்திரங்கள் எவ்வளவு பெரிய நடிகையாகவும் இருந்தாலும் கைது செய்யும்படியும் அரசின் மேல்மட்டத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கைதுகளை எதிர்பார்க்கலாமோ?
நடிகைகளை கைது செய்தால் மட்டும் போதுமா? கூட இருக்கும் தொழில் அதிபர்களின் முகத்தையும் காட்டுங்களேன்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.