சுப்பிரமணிய சாமி தமிழ் நாளிதழ் ஒன்றில் அளித்த பேட்டி தொடர்பாக அவர் மீது முதல்– அமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கை தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கை ஜெயலலிதா தொடர்ந்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர தலைமை குற்றவியல் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில் கூறியிருப்பதாவது:–
ஆங்கில பத்திரிகை ஒன்றில் கடந்த 4–ந்தேதி சுப்பிரமணிய சாமி பேட்டி வெளியாகியுள்ளது. அதில், தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ராணுவம் பிடித்து செல்வது தொடர்பாக பேசிய சுப்பிரமணிய சாமி, தமிழக அரசுக்கும், முதல்– அமைச்சருக்கும் பொதுமக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் விதமாக சில கருத்துக்களை கூறியுள்ளார். எனவே, அவதூறு கருத்துக்களை கூறிய சுப்பிரமணிய சாமி, இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.