ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஐ'. இந்த படத்தை ஷங்கர் சுமார் 2 வருடங்களாக இயக்கி வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருத்தினராக ஹாலிவுட் நாயகன் அர்னால்டு கலந்து கொள்கிறார். இதற்காக இன்று காலையே விமானம் மூலம் சென்னை வந்து விட்டார். இந்த விழா இன்று மாலை நடைபெற உள்ளது.
சென்னை வந்த அர்னால்டு இன்று மதியம் 2.45 மணி அளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். தமிழகத்தின் சாதனைகள் மற்றும் சிறப்புகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். ஜெயலலிதாவுடனான சந்திப்பு சிறப்பாக இருந்ததாக கூறினார். தன்னை அழைத்து சென்ற பாதுகாப்பு அதிகாரியின் தோழில் கை போட்டு கொண்டு சகஜமாக இருந்தார். அர்னால்டு கலிபோர்னியாவின் ஆளுநராக 8 ஆண்டுகள் இருந்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.