BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 15 September 2014

விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து, நீதிமன்ற இடத்தை மாற்ற கோரி ஜெயலலிதா மனு


செப்டம்பர் 20ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்ற நிலையில் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஒரு மனுதாக்கல் செய்தார்.

அதில் தன் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து உள்ளது என்றும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால், தீர்ப்பு அளிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை பரப்பனஅக்ராஹாரத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று கூறினார். தீர்ப்பு நாள் நெருங்கி வரும் நிலையில் ஜெயலலிதா புதிய மனு தாக்கல் செய்திருப்பது வழக்கை தாமதப்படுத்த முயற்சியா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media