BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 15 September 2014

கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி என அதிமுக மீது பாஜக குற்றச்சாட்டு


கோவையில் தற்போது மாநகராட்சிக்கு தேர்தல் நடந்து வருகிறது, திமுக தேர்தலில் போட்டியிடாததால் தற்போது போட்டி அதிமுக மற்றும் பாஜகவிற்கிடையே உள்ளது, இந்நிலையில் துடியலூர் வட்டாரத்தில், அ.தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பரபரப்பு புகார் கிளம்பியது. நேற்று மதியம், துடியலூர், சேரன் காலனியில், கோவை மாநகராட்சி 1வது வார்டு, பா.ஜ.க  கவுன்சிலர் வத்சலா மற்றும் பா.ஜக  நிர்வாகிகள் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்குமாறு கூறி, வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக சில  நபர்களை சுற்றி வளைத்து அவர்களை போலிசாரிடம் ஒப்படைத்தனர். இதனாக் அ.தி.மு.க. மற்றும் பாஜகவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media