BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 13 September 2014

மலாலாவை சுட்ட தீவிரவாதிகளை இரண்டு வருடங்களுக்கு பின் கைது செய்தது பாகிஸ்தான் அரசு !!



இளம் வயது சமூக ஆர்லரான மலாலா யுசப்சாய் 2012 ஆம் ஆண்டு தாலிபான்  தீவிரவாதிகளால் தாக்கப்பட்டார் . அவரை தாக்கிய 10 தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர் .

மலாலா தாலிபான் ராணுவத்தின் கீழ் தன்னுடைய வாழ்க்கைப் பற்றி பிபிசிக்கு ஒரு டைரி எழுதினார் . இதன் மூலம் பொது மக்கள் கவனத்திற்கு வந்தார் மலாலா . இவர் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார் . உலகை உலுக்கிய இந்த தாக்குதலில் இருந்து மெதுவாக குணமாகி வந்தார் . இதன் பின்னர் இவர் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராட துவங்கினார் .

இதனால் இவர் உலக அமைதி நோபல் பரிசிற்காக நாமினேட் செய்யப்பட்டார் .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media