ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் தமாகாவினர் செயல்படுவர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. இதை வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் விரும்பிப் பார்க்க வருகிறார்கள். தற்போது ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனுமதியைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார். ஜி.கே.வாசனுடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், யுவராஜா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
விருதுநகர்: விருதுநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காமராஜரின் வழியில் தமாகாவை ஏற்படுத்தி தமிழகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்குவோம். கட்சியில் 50 லட்சம் பேரை உறுப்பினர்களாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அதனால் அரசு அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.