ஈழத்தமிழர்களின் போராட்டத்தை தீவிரவாதம் என சித்தரிப்பது போலவும், அவர்களுடன் தமிழக அரசியல் தலைவர்கள் பலருக்கு நேரடி தொடர்பிருந்து தீவிரவாதத்தை வளர்த்து விட்டது போலவும் சித்தரிக்கபட்டு ஜான் ஆபிரஹாம் நடித்து ஹிந்தியில் வெளியாகியுள்ள மெட்ராஸ் கபே படத்தை தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவில் பலரும் எதிர்த்து வருகிறார்கள்.
தமிழகத்தில் மதுரையில் இப்படத்தை வெளியிடக்கூடாது என தமிழ் ஆர்வலர்கள் தொடுத்த வழக்கில், தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாகும் படத்தை சரியான விளக்கம் அளிக்காமல் திரையிடக்கூடாது என நீதிமன்றம் அறிவித்தது, அதனால் அப்படம் நேரடியாக ஹிந்தியில் வெளியாவது போல் தெரிந்தது.
நாளை தமிழகத்தில் வெளியாகும் என விளம்பரபடுத்தி கொண்டிட்ருந்தது மெட்ராஸ் கபே தயாரிப்பு தரப்பு, இந்நிலையில் இன்று பாலசந்திரன் மாணவர் இயக்கம்” மற்றும் ”தமீழீழ மாணவர் கூட்டமைப்பை” சேர்ந்த 30 மாணவர்கள் மயிலாப்பூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது மொத்த தமிழகமெங்கும் கிளர்ச்சியை உருவாக்கும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மயிலை காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து அருகில் இருக்கும், திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது. இதை தொடர்ந்து சென்னை சட்டகல்லூரி மாணவர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது, மேலும் சேலம், மேட்டூர் பகுதிகளிலும் மாணவர்கள் போராடி தொடங்கியுள்ளனர்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.