ஷிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் புரட்சியாளர்களை கட்டுபடுத்த ஷிரிய ராணுவம் ரசாயனகுண்டு தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது, இதில் 1300 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதில் பெரும்பாலோர் குழந்தைகள். இந்த குண்டு நேற்று அதிகாலை மூன்று மணியளவில் வீசப்பட்டதால் ஏராளமான மக்கள் தூக்கத்திலேயே இறந்ததாக தகவல் தெரிவிக்கிறது.
இதை தொடர்ந்து பல்வேறு உலகநாடுகள் ஷிரியாவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது, அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவிக்கையில், போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவது உலக நாடுகளிடம் போடபட்ட ஒப்பந்தத்தின் பேரில் தடைசெய்யபட்டுள்ளது, அதை மீறி ஷிரிய அரசு ரசாயண வாயு வெடிகுண்டை பயன்படுத்தி இருப்பது மிகவுன் கண்டிக்கதக்கது என தெரிவித்தார்.
இது குறித்து அமெரிக்க மற்றும் நேசநாட்டு படைகள் ஆய்வு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். எகிப்தை போலயே ஷிரியாவிலும் பல ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்தது, அதை எதிர்த்தே புரட்சியாளர்கள் போராடி வந்ததாக தெரிகிறது. அதன் முக்கிய காரணமாக இஸ்லாத்தில் உள்ள சுன்னத் மற்றும் ஷியா பிரிவு கருத்து வேறுபாடுகளே காரணம் என அறியப்படுகிறது.
ஷிரிய அரசோ தாங்கள் ரசாயன போர் ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்திருக்கிறது. நேசநாட்டு படைகளின் ஆய்வுக்கு பின்னர் ஐநா சபையில் ஷிரியா மீதான விசாரணை தொடங்கும் என ஐநா சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதை தொடர்ந்து பல்வேறு உலகநாடுகள் ஷிரியாவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது, அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவிக்கையில், போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவது உலக நாடுகளிடம் போடபட்ட ஒப்பந்தத்தின் பேரில் தடைசெய்யபட்டுள்ளது, அதை மீறி ஷிரிய அரசு ரசாயண வாயு வெடிகுண்டை பயன்படுத்தி இருப்பது மிகவுன் கண்டிக்கதக்கது என தெரிவித்தார்.
இது குறித்து அமெரிக்க மற்றும் நேசநாட்டு படைகள் ஆய்வு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். எகிப்தை போலயே ஷிரியாவிலும் பல ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்தது, அதை எதிர்த்தே புரட்சியாளர்கள் போராடி வந்ததாக தெரிகிறது. அதன் முக்கிய காரணமாக இஸ்லாத்தில் உள்ள சுன்னத் மற்றும் ஷியா பிரிவு கருத்து வேறுபாடுகளே காரணம் என அறியப்படுகிறது.
ஷிரிய அரசோ தாங்கள் ரசாயன போர் ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்திருக்கிறது. நேசநாட்டு படைகளின் ஆய்வுக்கு பின்னர் ஐநா சபையில் ஷிரியா மீதான விசாரணை தொடங்கும் என ஐநா சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.