கடந்த சில தினங்களாக காஷ்மீர் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் பலியானர்கள், பலர் படுகாயம் அடைந்தனர், இதை பயன்படுத்தி சில பங்கரவாதிகளும் இந்திய எல்லைக்குள் ஊடுறுவும் முயற்சிகளும் நடந்தது. இந்திய ராணுவத்தினர் அவர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களது முயற்சியை முறியடித்தனர்.
கடந்த 10 நாட்களில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 90 முறைக்கும் மேலாக அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது, இதை தொடர்ந்து இந்திய பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஏற்படுத்திய தொடர் அமுளியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்க பட்டுகொண்டே இருந்தது, இந்த மாதத்தில் மட்டும் 10 நாட்களுக்கும் மேலாக நாடாளுமன்றம் முழுமையாக செயல்படாமல் ஒத்தி வைக்கபட்டு குளிர்கால கூட்டத்தொடர் செப் 5 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்திய தரத்திலிருந்து ஐ.நா கூட்டத்தில் பாகிஸ்தானுடன் பேசலாம் என்று அறிவித்திருந்தாலும் பாகிஸ்தான் தரப்பில் பேச்சுவார்த்தை குறித்து எந்த வித பதிலும் இல்லாமல் இருந்தது, இதனிடையில் நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது, அதற்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானை சேர்ந்த கமாண்டோ படை தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் அரசு இன்று இந்திய தூதரகத்திற்கு கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானின் அத்துமீறலை அவர்கள் இப்போது வரை ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக இன்று நடந்த பாகிஸ்தான் மக்களவையில் இந்தியாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது.
பாகிஸ்தான் அரசு இவ்வாறு தீர்மானம் கொண்டு வந்திருப்பது, இனி பேச்சு வார்த்தைக்கு இட்டு செல்லாது என்றும், எல்லை பகுதிகளில் போர் மேகம் சூழ்திருப்பதாகவும், மீண்டும் ஒரு கார்கில் போரை இந்திய சந்திக்க நேரிடும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.