BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 22 August 2013

சேம் ஓல்ட் டெக்னிக்கில் 4கோடி ரூபாய் கோல்ட் கொள்ளை, மாட்டிய அண்ணனின் விழுதுகள்

சேம் ஓல்ட் டெக்னிக்கில் 4கோடி ரூபாய் கோல்ட் கொள்ளை, மாட்டிய அண்ணனின் விழுதுகள்

ஓசூர் டைட்டான் நிறுவனத்திலிருந்து 4கோடி மதிப்புள்ள தங்க நகைகளை வேனில் ஏற்றிக்கொண்டு சதீஷ் குமார் என்பவர் சூப்பர்வைசர் ராஜேந்திரன் மற்றும் பாதுகாவலர் சுப்ரமணி ஆகியோடருடன் வேனில் வந்துள்ளார்,
பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் வண்டியை சாப்பிட நிறுத்தி விட்டு சென்று பின் திரும்பிய போது வண்டியை காணவில்லை, வேன் நான்கு கிலோ மீட்டர் தள்ளி நின்று கொண்டிருந்தது, அதில் இருந்த தங்கம் மட்டும் காணவில்லை.

சூப்பர்வைசர் மேலதிகாரிகளுக்கு தகவல் அளிக்க உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய காவல் துறையினர் வண்டி நின்ற இடத்தில் உள்ள கிராம மக்களிடம் விசாரித்துவிட்டு கவனிப்பை மூன்று பேர் மீதும் திருப்பியதில் டிரைவர் சதீஷ் குமார் உண்மையை கக்கியுள்ளார். சதீஷ் குமார் ஒரு டூப்ளிகேட் சாவியை தயாரித்து அதை நாகராஜ் என்பவரிடம் தந்துள்ளார், நாகராஜ் என்பவர் இவர்களை பின் தொடர்ந்து காரில் வந்து வண்டியை நிறுத்திய உடன் அதை எடுத்துக்கொண்டு போய் தங்கத்தையும் தூக்கி கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார், தங்கத்தை தனது வீட்டில் தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு மைசூர் சென்று தங்கத்தை விற்க ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் சதீஷ்குமார் உண்மைகளை கதற கதற சொல்ல சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார், தங்கம் நாகராஜ்ஜின் வீட்டு தண்ணீர் தொட்டியிலிருந்து மீட்கப்பட்டது, நாகராஜை போலிசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

இப்படி நகை வண்டியில் இருப்பது தெரிந்து கொள்ளை அடித்தால் முதலில் டிரைவரை தான் நொங்கெடுப்பார்கள் என்று கூட தெரியாத அண்ணனின் விழுதுகளே! நகையை கொண்டு போய் தண்ணீர் டேங்கில் வைத்திருக்கிறீர்களே என்னா டெக்னிக்குடா

# எவன் டா சொன்னது உங்களுக்கு இந்த நம்பியார் காலத்து டெக்னிக்கை?



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media