BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 23 August 2013

மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் குரு கைது.



கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி மரக்காணம் கலவரத்தை முன்வைத்து காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டார், அதை தொடர்ந்து அவர் மேல்முறையீடு செய்ததால் அவரை விடுவிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆயினும் மீண்டும் ஜூலை மூன்றால் தேதி குரு தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டார், இரண்டாம் முறையும் மேல்முறையீடு செய்த குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுவிக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆனால் இன்று மீண்டும் காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளார். இம்முறை தமிழக அரசிடம் இருந்து நேரடியாக உத்தரவு வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media