BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 23 August 2013

பாகிஸ்தான் சிறையில் இருந்து 357 மீனவர்கள் விடுதலை.

இந்திய அரபிக்கடல் பகுதியில் மும்பை மற்றும் குஜராத் மீனவர்கள் அதிகமாக மீன் பிடித்து வருகிறார்கள், இரவு நேரங்களில் வழி தெரியாமல் அவர்கள் பாகீஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்த விசயத்தில் அவர்களிடம் இருக்கும் நேர்மை உடனே இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்து விடுவார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இருந்தனர், அவர்களை விடுவிக்க கோரி இந்தியா சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு கொண்டு இருந்தது, இது குறித்து பரிசீலனை செய்த பாகிஸ்தான் ஆகஸ்ட் 23 அன்று 357 மீனவர்களை விடுவிப்பதாக சென்ற மாதம் அறிவித்தது.

ஆனால் கடந்த சில தினங்களாக காஷ்மீர் எல்லையில் நிகழ்ந்து வரும் தொடர் பதட்டத்தால் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவது நிறுத்தப்படலாம் என்று மீனவர்கள் மத்தியில் அச்சம் நிலவியது, இது குறித்து  இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் பாகிஸ்தானுடன் பேச்சை வார்த்தை நடத்தினார், அவர் வேண்டுகோளுக்கு இனங்கி பாகிஸ்தான் இன்று 357 மீனவர்களை விடுவித்தது.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media